Friday, August 12, 2011

நெடுங்குடி கிரிவலம் அதிசயங்கள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.

சென்னையில் உள்ளவர்களுக்கு மத்திய கைலாஷ் போன்று தென் பகுதில் உள்ளவர்களுக்கு தென் கைலாஷ்தான் நெடுங்குடி. இந்த கோவிலில் சிவராத்திரி அன்று மிக பெரிய அளவில் திருவிழாக்கள் நடத்தப்படும்.  சுத்துப்பட்டு கிராமத்தார்கள் அனைவரும் வந்து குவிந்து விடிய விடிய கொண்டாடிவிட்டு செல்வது வழக்கம்.

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி மேற்கே சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்லலாம்.

இந்த தலதிற்குகான  வரலாறையும் பார்ப்போம்...

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார்.
அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.

காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி கயிலைநாதனை நோக்கி தவமிருந்தார்.

கயிலைநாதன் இருவர் முன்பும் தோன்றி பெருஞ்சீவி பூஜை செய்த லிங்கம் கைலாசநாதர் எனவும், சிரஞ்சீவி கொண்டு வந்த லிங்கம் காசிநாதர் என பெயர் சூட்டி, இங்கு வழிபட்டால் காசியிலும், கையிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார்.

13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.


மனநிலை சரியில்லாதவர்களை குணமாக்கும் நம்பிக்கை :

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இப்படி ஜெபிக்க மனநிலை சரியில்லாதவர்களை குணமாக்கும் என்று இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அதை போலவே பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாசநாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும் என்று மக்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.

புதுக்கோட்டையில் உள்ள பெரும்பான்மையான கோவில்களை போலவே நெடுங்குடி கைலாசநாதர்-பிரசன்னநாயகி கோவிலும் மிக பழமையான கோவிலாகும். 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.
திருவிழாக்கள்:

ஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.

( தினமலர் கோவில்கள், ஹோலி இந்தியா மற்றும் முப்பழம் உதவியுடன்  படங்கள் மற்றும் செய்திகள்.. )

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment